புதன், 6 நவம்பர், 2013

மன்றிலாடும் சுரத்குமார்

   


மின்னல் வீச்சு கன்னல் பேச்சு
யோகிராம் சுரத்குமார்
தென்றலோடு தேனும் பாயும்
மன்றிலாடும் சுரத்குமார்
                            (யோகிராம் சுரத்குமார்
கையில் விசிறி சிரட்டை ஏந்தி
யோகிராம் சுரத்குமார்
ககன வெளியில் நடனம் ஆடும்
யோகிராம் சுரத்குமார்
                             (யோகிராம் சுரத்குமார்

விழிகள் விரிய மலர்கள் பொழிய
யோகிராம் சுரத்குமார்
கரங்கள் அசைந்து கவிதை ஆகும்
யோகிராம் சுரத்குமார்
                             (யோகிராம் சுரத்குமார்
கையில் கயிறு சுழற்றி வரும்
யோகிராம் சுரத்குமார்
கரங்கள் தூக்கி வரங்கள் தரும்
யோகிராம் சுரத்குமார்!

                             (யோகிராம் சுரத்குமார்                   08-05-2012

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

                                            ஆயிரம் பூக்கள் மலரட்டும்  



நம் தந்தை யோகி ராம் சுரத் குமாரரின் 
அன்பு மழையில் நனையும் 
நம் அன்றாட அனுபவங்களில் மலரும் பூக்களில்
ஓராயிரம் பூக்கள் இங்கு மலரட்டும் 
கவிதா நண்பர்களே 
இந்த மண்டலம் எங்கும் 
நம் தந்தையின் பெயரால் 
நம் கவிதைகள் வலம்  வரட்டும் 

- விசிறி சங்கர்